Friday, November 21, 2008

தாகம்...தாகம்...தாகம்...







Thursday, November 20, 2008

தாகம்...தாகம்...தாகம்...தாகம்...தாகம்...







Friday, August 8, 2008

உலக வெப்பமேறல் - உலக வெம்மை - உலக வெப்பம் கூடுதல் - Global Warming


கடைசி எச்சரிக்கை அண்ணாச்சிக்களுக்கு..

முதலில் தாத்தாக்கள் காலம் பசுமை கொஞ்சும் கிராமங்கள், காற்றோட்டமான ஓட்டு வீடுகள்,எளிமையான் அரிக்கேன் விளக்கு வெளிச்சம், வெளியிடங்களுக்கு செல்ல வில்வண்டி

மனித உழைப்பு சார்ந்த இயற்கை விவசாயம்
கலப்படமற்ற வீரிய விதைகள் விளைச்சலோ அபாரம்!
உணவில் தன்னிறைவு.செய்யும் தொழில் சார்ந்த ஜாதி பிரிவுகள் இருந்த போதும், சண்டையில்லா சமரச சந்தன நறுமணம் தவழ்ந்த காலம்.

அடுத்தது அமைதி தாத்தாகளின் மகன்கள் காலம்..

மெல்ல மெல்ல அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கம்.
கல்வி கேள்விகளின் நாகரிகத்தில் நல்ல வளர்ச்சி.

பகுத்தறிவு பிரச்சாரங்கள் மலர்ந்த நேரம்.

விவசாயத்தில் செயற்கை உரங்கள், இரசாயன பூச்சி கொல்லி மருந்துகள், இயந்திரங்கள் ஆகியவற்றின் படையெடுப்பு.

உணவு உற்பத்தி வாய்க்கும்-கைக்குமான நிலை

மத-ஜாதி-இன சண்டைகள் தோன்றி மனித உயிர்கள் காவு கொடுக்கபடல் தொடக்கம்.

இயற்கை சூழல் கெடத்தொடங்குகிறது. புதுப்புது நோய்களின் ஆலவட்டம்.

ஆங்கில மருந்துகளின் புற்றீசல் வளர்ச்சி.

ஓட்டு வீடுகள் கான்கிரிட் விடுகளாக உறுமாற்றம்.
வெளிச்சம் போச்சு, காற்றும் போச்சு, ஆரோக்கியமும் போச்சு..


போக்குவரத்தில் கரும்புகைகக்கும் வாகன தானியங்கி ஊர்திகளின் ஊர்வலங்கள்.
மனித நேயம் மெல்ல மெல்ல சுயநலத்தால் ருசிக்க படத்துவக்கம்.

கூட்டு குடும்பங்களின் சிதைவின் தொடக்கம்
அமைதி மறைந்து இருக்குமான் அசாதாரண சுழ்நிலை.

மின்விசிறி, தொலைக்காட்சி, தொலைபேசி, இருசக்கிரவாகனம் போன்ற வசதிப்படைத்தோரை போன பிறவியில் பூண்ணியம் பண்ணிய ஆத்மாக்கள் என பாராட்டபட்ட காலம்.

அடுத்து தாத்தாவின் பேரன்கள் வாழும் ஐ.டி காலம்..


பரப்பரப்பு நிறைந்தது..பாதுக்காப்பு அற்றது..பகட்டா மட்டும் தெரியுது..கைநிறைய வருமானம்..கவலையற்ற களிப்பு வாழ்வு..
கடனை உடனை வாங்கி கண்ணில் காணும் பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிக்கும் மனோபாவம்..

நடுத்தரவயது மக்களின் நிரந்திரமாக குடியேறிவிட்ட நச்சு பாம்புகளாம் சக்கரை வியாதி,இரத்தக் கொதிப்பு..
தண்ணீர் பாட்டீலோடு அலையும் மக்கள் ஒரு பக்கம், மூக்கு கவசத்துடன் தடதடக்கும் பூகை கக்கும்
வாகன தேரோட்டிகள்..

எந்த குண்டு எங்கு வெடிக்குமோ எனும் பதைபதைப்பு..சொந்த இனத்தையே துண்டு-துண்டாய் பிய்த்து எறியும் பயங்கரவாத்தின் கொடூங்கரங்கள்..

அடுத்த வீட்டுக்காரைன் பெயர் தெரியாத அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்க்கையின் தொடக்கம்.
நடுத்திரவர்க்கத்தின் மாதவருமானம் பெருக்கத்தால் வீட்டிற்கு இரண்டுக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள்.
காலை நடைபயிற்சிக்கு கூட கார்களில் வரும் பருத்த தேக சொந்தங்கள்.

எங்கும் கன்சூமரிசம் எதிலும் கன்சூமரசியம்.

குடிக்கும் தண்ணீர் சாயப் பட்டறைகளால் கெட்டுப்போச்சு
ஆலைகள் வெளியிடும் நச்சுப் புகை
ஒவ்வாமை நோய்களின் ஆட்சி

சுவாசிக்கும் காற்று மாசுபட்டுப் போச்சு.

பூமிப்பந்தில் மேல்பரப்பின் வெப்பம் ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.
சூரியனிமிருந்து மனித இனத்தைக் காக்க இயற்கை கொடுத்த் ஓசோன் அடுக்கில் ஓட்டை

இதனால்

1.திடீர் வெள்ளப் பெருக்கு
2,.சுழற்றி அடிக்கும் சூறாவளிகள்
3புரட்டிப் போடும் புயலகள்
4.க்டும் வறட்சி
5.குறைவான மழை
6.வெப்ப நோய்களின் படையெடுப்பு
7.உணவுப்பற்றாக்குறை
8.நிலப் பகுதியை முழுங்கும் கடல்களின் சீற்றம்.
9.பனிப்பாறைகள் வேகமாய் உருகும் தன்மை.
10.மனித இனமே அழியும் அபாயம்.


அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய


விழிப்புணர்வுக்காக இன்று ( 08-08-08) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.!








உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்!
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!
தியாகம் செய்வோம்!

மனிதம் காப்போம்!
மானுடம் காப்போம்!
-
கோவை விஜய் - திருமலை
http://pugaippezhai.blogspot.com/

Thursday, July 24, 2008

கோவையில் தேசபிதாவின் மறுபிறப்பு...


நம் இந்திய தேசத்தில் ஒரு மாபெரும் கொடுமை. மனித கழிவுகளை தலையில் சுமக்கும் ஒரு பிரிவினர் இருந்த காலம். இந்தக் கொடுமையை நீக்க வேண்டும் என் மக்களுக்கு உணர்த்த நம் தேசப் பிதா காந்தி தனது கழிப்பறைகளை தானே சுத்தம் செய்தார். இது வரலாறு. இந்த கொடுமையை முழுவதும் நீக்க பாடுபட்டோர் பல உத்தமத் தலைவர்கள்.

உலர் களிப்பிடங்கள்( dry lavo) காலம் மெல்ல மறைந்து "flush out" கிராமம்,நகரம் எங்கும் வரத் தொடங்கின. இருந்த போதிலும் அந்த கழிப்பறைகளை சுத்தம் செய்ய வெளி ஆட்ளை உபயோகிக்கும் மணோபாவம் மட்டும் மாறின பாடில்லை.

தன் வீட்டு கழிப்பறையே சுத்தம் செய்ய யோசிக்கும் காலத்தில் பிறர் வீட்டு கழிப்பறைகளை சுத்தம் செய்து அதில் வரும் பணத்தை ஏழை அனாதை குழந்தைகளின் உணவுக்காவும்,உடைக்காவும்,கல்விக்காவும் செலவழிக்கும் ஒரு உத்தமர் லோகநாதன்-கோவையில் காந்தியின் மறு பிறப்பன்றோ!

ஆறுவரை படித்ததால் ஒரு தனியார் வெல்டிங் கம்பெனியில் வேலை. அதில் வரும் சம்பளம் அவர் குடும்ப அன்றாட செலவுக்கு.

வேலை நேரம் முடிந்ததும் கல்யாணமண்டபம், பொது இடங்கள், பிறர் வீடுகள் முதலியவ்ற்றில் உள்ள கழிபிடங்களை சுத்தம் செய்து அதில் வரும் பணத்தை ஏழை எளிய ஆதரவற்ற குழந்தையின் கல்விக்காக செலவ்ழித்துவருகிறார்.

கழிப்பறைகளை சுத்தம் செய்வதால் கிடக்கும் பணத்தை வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு ஆண்டு முடிந்ததும் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வில்( 10 th,12 th) அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமூகரீதியாக பின்தங்கிய சமுதாய குழந்தைகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலம் கையேடுகளை வழங்குவதை வழக்கமாய் கொண்டுள்ளார் நம் லோகநாதன்
வீடு வீடாகச் சென்று மற்றவ்ர் உபயோகித்த பழைய துணிமணிகளை சேகரித்து ,அவரது வாழ்க்கை துணவி சலவை செய்து தர அதை அணாதை குழந்தைகளுக்கு அளித்து அகமகிழ்கிறார்.
இந்த தன்னல்மற்ற சமுதாயப் பணியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறார்..
இப்படி சில புண்ணியவான்கள் இருப்பதால் தான் ஏதோ கொஞ்சம் மழையும்,மனிதமும் இருக்கிறது.

அவரின் முகவரி..

திரு.லோகநாதன்
எஸ்.எம்.இன்ஜீனியரிங்,
697,ராமநாதபுரம்,
கோயம்புத்தூர்-45.

செல்- 99526 21150